ஹைக்கூ கவிதைகள்

Monday 2 July 2012

உனக்கு நிகர் நீயே



நமது இந்தியாவை இன்றை இளைஞர்கள் தான் கட்டிக்காக்கும் தூண்கள்.

ஆனால் அவர்களோ பொறுப்பற்று சாதி தலைவர்கள், மத வெறியர்கள், அரசியல் வாதிகள் என்று தடம் புரண்டு போய் தனது வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறார்கள். எனவே இளைஞர்களுக்கென ஒரு புத்தகம் எழுத வேண்டுமென நண்பர் A.S. சந்துருவிடம் கேட்டுக்கொண்டேன்.

அடுத்து ஒரு சில மாதங்களில் எழுதி முடிக்கபட்டதுதான் "உனக்கு நிகர் நீயே".

நண்பர் A.S.சந்துரு அவர்களின் சுறுசுறுப்பும், நம்பிக்கையும் பல சமயங்களில் என்னை பிரமிக்க வைத்துள்ளது.

"எழுதிய வண்ணம் நடத்தை. நடத்தையே எழுத்து" என்ற கோட்பாட்டில் சந்துருவுக்கு நிகர் சந்துருதான். எனவே எமது பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடான "உனக்கு நிகர் நீயே" நம் அனைவருக்குமே கண்டிப்பாக பயனுள்ள நூலாக இருக்கும்.

நண்பர் A.S. சந்துரு இன்னும் பல நூல்கள் எழுதி எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமான தலைமுறைகளை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

இளங்கோவன்
பதிப்பாசிரியர்

0 comments:

Post a Comment