தொழில் புரட்சியும் மனித சமூகத்தின் பெருக்கமும் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. இதன் விளைவால் எதிலும் அவசரம், நேரமின்மை இன்றைய மக்களை பெரிதும் அலைக்கழகிக்கின்றது. இத்தகைய வாழ்க்கைச் சூழலில் அவசர அவசராமகத் தூங்குவதும், எழுவதுமாக மாறிவிட்டதுபோது செயலில், தொழிலில் நிதானம், பொறுமை என்பதெல்லாம் குறைந்துகொண்டு வருவதனால் பெரும் சிக்கல் உருவாகின்றன.
தொழிற்புரட்சியினால் எதிலும் போட்டி, போட்டியில் வென்றவரே திறமையானவர் என்ற மாயையும் உருவாகியதனால் உண்மை, நேர்மை, தரம் என்பவை எல்லாம் இரண்டாம் தரத்திற்கு வந்துவிட்டதனால், வேக வேகமாய் செய்து சீக்கிரம் ஜெயித்துவிட வேண்டும் என்னும் எண்ணம் பொறுமைக்கும், நிதானத்துக்கும் இடமில்லாமல் செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில் உழைப்புடன் பொறுமையும், நிதானமும் சேரும்போது வெற்றி எளிதில் சாத்தியமாகிறது.